என்ன பாவம்செய்தாய்?


தாய்மொழியே என்ன பாவம்செய்தாய்?
எடுப்பது கலை விழா அங்கு நடப்பது 
உன்கொலை விழா
கவிஞன் உனை கடித்து குதறினான்
இசைப்போன் உனை இழிவு படுத்தினான் 
நடிகன் உனை நையப்புடைத்தான்
நம் இனமும் உனை எண்ணமறந்தது
நானும் உனை சுவைக்க மறந்தேன் 
நாமே உனை காயப்படுதினோம்
களங்கபடுத்தினோம்
என் தாய்மொழியே நான் அழவா
அவமானப்படவா?