சமூகம்

நமக்கேன் இந்த பேராசை

"அன்னை அகம் நொந்தாள்  அம்மா எனும் போது தந்தை முகம்வாடினான் அப்பா எனும்போது, மாறாக இருவரும் மனம் மகிழ்ந்தனர் டாடி மம்மி எனும்போது"
அப்பா  அம்மா என்று அழைக்கவேண்டிய குழந்தை டாடி மம்மி என்றதும் அந்த மாற்றத்தை மகிழ்வுடன் வரவேற்றோம். அப்போது தொடங்கிய மாற்றம் இன்று வரை அசூர வளர்ச்சியில் போய்க்கொண்டிருக்கிறது. அன்றே இது வேண்டாம் என நம்மால் ஏன் தடுக்கவோ,தவிர்க்கவோ  இயலவில்லை.மாறாக ரசித்தோம்...தூக்கி வைத்து கொண்டாடினோம்...மாற்றம் இயல்பு தானே என சமாளித்தோம்.! உண்மைதான்., ஆனால் மாற்றம் என்பது மையத்தை விட்டு விலகினாள்

எங்கே போகிறோம்?


சற்று சிந்தியுங்கள்.,
நாம் எங்கேபோகிறோம்?
உலகத்தில் அழிந்த மொழிகளின்
பட்டியலில் தமிழ்மொழியினையும் இணைப்பதற்குப்போகின்றோமா?
அல்லது தமிழிலிருந்து
மலையாளம்,தெலுங்கு,கன்னடம்
போன்ற மொழிகள் உருவானது 
போல புது மொழி ஒன்றை உருவாக்குவதற்காகப்போகின்றோமா?நாம் தமிழர் 
எனச்சொல்லும் நம்மில் எத்தனைபேர் தமிழர்களுடன் 
உரையாடும்போது தமிழில் உரையாடுகின்றோம். 
ஏன்முடியவில்லை
இதில் என்ன சிக்கல்? நீங்கள் தமிழில் உரையாடுவதனை சகதமிழனால் புரிந்து கொள்ளமுடியவில்லையா?அப்படிஎன்றால் 
சொல்லிக்கொடுங்கள் உங்களிற்கு தமிழ்ச்சொல் 
தெரியவில்லையா?கண்டுபிடியுங்கள்,அதற்காக 
ஒன்றையும்புதிதாககண்டுபிடிக்கசொல்லவில்லை
உள்ளவற்றைத்தேடுங்கள்.இது ஒருபுறமிருக்கட்டும்.
ஒரு சாரார் தமிழில் பேசுவதையே தரக்குறைவாக 
எண்ணுகிறார்கள் இது என்ன புதுவிதமான தாழ்வு 
மனப்பான்பு புரியவில்லை.ஏன் புலம்பெயர் 
தமிழர்கள்கூட தாம்வாழும்நாட்டு மொழிச்சொற்களை 
கலத்து கதைத்தால்தான் பெருமைஎன 
எண்ணுகிறதன்மைகூட காணப்படுகிறது இதுஎன்ன 
புதுமை தன் மொழியை தானே புதைகுழியில்தள்ளும் 
துரோகமன்றி வேறென்ன? இவ்வாறு பேசுபவரை 
அறிவாளி என முடிவேடுக்கலாமா அல்லது 
நாகரிகமானவர்கள் என எண்ணுவதா? தனதாய் 
மொழியினைக்கூட சரளமாக பேசத்தெரியாத
முட்டாள்என முடிவெடுக்கலாமா
இது ஒருபுறமிருக்க தமிழில் கதைத்தால்,
நீங்கள் சுத்த தமிழில் தான் கதைப்பீர்களா?
எனக்கேளியாகக்கேட்பார்கள்.இதில் என்ன இருக்கு 
தமிழ் என்பது ஒரு மொழிதானே இதில் என்ன 
சுத்தம்,அசுத்தம் தமிழின் உட்பிரிவுகளா என்ன
முடிந்த அளவிற்கு தமிழ் மொழியை சிதைக்காமல் 
பாதுகாப்போம்.

தடம்புரண்டுவிட்டன

நமேக்கென்று என்ன தனித்துவம் இருக்கின்றது கலாசாரநிகழ்வுகள்தனும் பிரதிபலிக்கின்றனவா? என்றால்.அதுவுமில்லை;இருந்தன ஆனால் தடம்புரண்டுபோய்விட்டன என்பதுதான் உண்மை. எடுத்துக்காட்டாக ஒரு திருமணவிழாவில் மணமகன் வேட்டிக்குப்பதிலாக வேறுவிதமான ஆடையுடன் ஆரம்ம்பித்து குதப்பி வெட்டி நிறைவு பெறுகிறது சரிபோகட்டும்; பிறகலாசார ஈர்ப்பு ஆனால், பூப்புனித விழாவிலும்  குதப்பி வெட்டும் முறைமை எவ்வாறு நுழைந்தது ஏன் எதற்கு என்று தெரியாமல் வரும் சந்ததிக்கு தவறாக வழி காட்டுகிறோம் என்ற குற்றஉணர்வில்லையா?பூப்புனித விழா மேலைத்தேசத்தவர் உருவாக்கியதா? அல்லது எமது படப்பிடிப்பாளர்கள் திறமையினைக்காட்ட உள்நுளைத்ததா? மேலும் படப்பிடிப்பு என்பது நிகழ்வுகளை பதிதல் என்றதளம் மாறி படப்பிடிப்பிற்காக நிகழ்வுகள் நடத்துதல் என்ற நிலைமையே முன்னோங்கி நிற்கிறது. காலப்போக்கில் தாலிகூட பட்ப்பிடிப்பிர்க்கு ஏற்றவாறு பலமுறை கட்டுவார்கள் போல இவையொன்றும் திரைப்படப்பிடிப்பு இல்லை என்பதை மறந்துவிடுகின்றோம்.

வதைப்பு

இன்று புலம்பெயர் தமிழரில் கணிசமான அளவினர் பிற புலங்களில் தமிழை விதைப்பதற்காக கலை நிகழ்வு மொழித்திறன் போட்டிஎன பெரிதும்பாடுபடுகின்றனர்,
சிலசமயங்களில் எல்லை தவறி தமிழ் கலைவிழா என்றபெயரில் பிற மொழிப்பாடல்களிற்கு நடனமென திசைமாறுவதையும் காணக்கூடியதாய் உள்ளது இவை ஒருபுறமிருக்க இன்னும்சிலர் தமிழை நன்றாக வதைக்கிறார்கள்,எவ்வாறெனில் தமிழ் அகாராதியே விருமம்பத்தகாத,அதாவது அநாகரிக சொற்களை  பிற மொழியினரிடம் நல்ல உச்சரிப்புடன் பயிற்றுவிக்கிறார்கள்.மாறாக வாழ்விட மொழிகளை பயில்வதில்  இல்லாத ஆர்வம்  பண்பற்ற சொற்களை பயிற்ருவிப்பதில் என்ன நாட்டம் .நல்ல வசனங்களை விதைக்கலாமே?ஏன் இந்த வதைப்பு ?மொழியும் உயிர்தானே!

தமிழ்மொழியின் நிலை


தமிழ்மொழியின் நிலை
இந்த நூற்றாண்டில் தமிழ் மொழியின் நிலை எவ்வாறு உள்ளது? என்பதை ஒவ்வொரு தமிழனும் சற்றுச் சிந்திக்க வேண்டும். பழங்காலம் முதற்கொண்டு இன்றைய காலம் வரை சகல சீரும், சிறப்பும் பெற்று, செம்மொழியாய் வெற்றிக் கொடி நட்டுவிட்ட து நம் தமிழ் மொழி.கூடவே இந்திய மொழிகளில் தொன்மை வாய்ந்த நம் தமிழ் மொழியின் இன்றைய நிலை என்ன? என்று சற்று நோக்குவோம். இன்று அதற்குள்ள சிக்கல்கள், குறைகள் என்ன என்று ஆய்வோம்.
பழங்காலம் முதல் ஓலி,எழுத்து வடிவமுடைய நம் தமிழ் மொழி! இத்தமிழ் மொழி, ஆங்கிலம், இந்தி, சமசுகிருதம், சிங்களம், டச்சு, போர்ச்சுக்கீசியன், உருது, துருக்கி, பாரசீகம், அரபு, மலாய் எபிரேயம் பிரெஞ்சு, கிரேக்கம், சீனம், மலையாளம், தெலுங்கு, கன்னடம், மராத்தி போன்ற பிறமொழித் தாக்குதல்களால் சிக்கித் தவித்துக்கொண்டுள்ளது. இன்னும் ஒரு நூற்றாண்டில் மேலும் கலப்படம் ஏற்ப்படக்கூடிய அயாய நிலையிலுள்ளது. இன்று தமிழர்களில் சிலர் தப்பான மனநிலை அல்லது தாழ்வு மனநிலை காரணமாகவும் தமிழின் அழகை சிதைக்கிறார்கள் 
அதாவது உரையாடும் போது சில பிறமொழிச்சொற்களை பயன்படுத்தினால் தான் தம்மை அறிவாளியாக காட்டலாம் என்று எண்ணுகிறார்கள்.
தமிழ் மொழியில் பிற மொழிகளின் ஊடுருவல்கள் நம் தமிழ் மொழியில் மாற்று மொழிகளின் கலப்பு இருக்கத்தான் செய்கிறது. மேலே எடுத்துக் காட்டிய பிறமொழிக் கலவையை உற்று நோக்குங்கள். தவிர்க்க முடியாத ஒன்று தான்.ஏனென்றால் சில சமயங்களில் பிறமொழிகளின் சொற்களை பயன்படுத்த வேண்டியே உள்ளது எடுத்துக்காட்டாக உணவு வகைகளில் வெதுப்பி,குதப்பி என்று சொல்லும் போது எத்தனை பேருக்கு புரியும் மாறாக முறையே பாண், கேக் என்றால் உடனே புரிந்து கொள்ளலாம்.அதற்காக பிறமொழி சொற்களை பயன்படுத்துவது நாகரிகமானது நினைப்பவர்களும் தனித்தமிழில் கதைத்தால் நாட்டு வளப்பம் தெரியாதவர்கள் என்றும் நினைப்பவர்கள் மத்தியில் தமிழை எவ்வாறு சிதைக்காமல் பயன் படுத்த முடியும்? பிறமொழிகள் நம் தமிழ் மொழியோடு கலந்து, இணைந்து இயம்புவதை ஏற்றுக் கொள்ளலாம்.அதற்காக இடம் கொடுக்கப்படலாமா? நன்கு சிந்தித்து விடை காணுங்கள். செயல்படவும் முனைந்திடுங்கள்
.

தமிழ் மொழி


தமிழ் என்பது ஒரு மொழிதானே அதன் மேல் பற்று என்ற பெயரில் புதுமைகளை ஏற்றுக் கொள்ள தயங்கவேண்டுமா ? மொழி வளர்ச்சிக்கு புதுமைகளை ஏற்றுக் கொள்ளாமல் இருப்பது தடையாகாதா ? என்ற கேள்வியை எனக்குள்ளே கேட்டு இருக்கிறேன். பலருக்கும் இந்த கேள்வி இருக்கும்.பல்வேறு காலகட்டங்களில் தமிழும் பல மாற்றங்களை சந்தித்து வந்திருக்கிறது. இலக்கிய வளம் நிறைந்த மொழிகளில் தமிழ் மொழி முதன்மையும் தொன்மையும் நிறைந்தது என்பதை கால்டுக்கு பிறகுதான் கண்டு கொண்டிருக்கிறோம். இயல் இசை நாடகம் என்று இருந்த தமிழ் இன்று அறிவியல் தமிழ், மருத்துவ தமிழ், இணையத் தமிழ் என்று பல்வேறு வகையில் வளர்ச்சி பெற்று வந்துள்ளது. சிலர் இது போதாது பிறமொழி சொற்களை ஏற்றுக் கொள்வதால் தமிழ் மேலும் வளரும் என்கிறார்கள். ஒரு மொழி சிதைந்து காணாமல் போவதற்கு அவை பிறமொழி சொற்களை ஏற்றுக் கொள்வது காரணியாக அமைவதில்லை. 
எழுத்துக்களை ஏற்றுக் கொள்வதாலேயே முற்றுமுழுதாக மொழி சிதைந்து விடும் .ஆனாலும் பிறமொழிச் சொற்களை ஏற்றுக் கொள்வதால் புதிய சொற்களை உருவாக்குதல் தடைப்படுகிறது ,அதே வேலை பழைய சொற்களை புதுப்பித்து பயன்படுத்த முடியாமல் பிறமொழிச் சொற்களை அப்படியே உள்வாங்கும் நிலை வந்துவிடும். எனவே நான் நினைக்கிறேன் கலப்பு அதிகம் ஆகஆக மொழியின் வளர்ச்சி குன்றும் சில நூற்றாண்டுகளில் மொழி தன் உருவத்தை இழந்து முற்றிலும் அழியும்.பிறமொழி எழுத்துக்களால் மொழி வளர்ச்சி என்பெதெல்லாம் வீண் வாதம். இது பல்வேறு மொழிகளுக்கு பல்வேறு காலகட்டங்களில் நடந்துள்ளது.இதற்க்கு எடுத்து காட்டாக நான் ஒரு தரவைமுன்வைக்க விரும்புகிறேன் உலகில் 6809 மொழிகளுள் 700 மொழிகளே எழுத வாசிக்க கூடியன இவற்றுள் 100 மொழிகள் மடுமே சொந்த வரி வடிவம் உடையவை எனினும் இவற்றுக்கெல்லாம் மூல மொழியாக பின்வரும் மொழிக்குடும்பங்கள் காணப்படுகின்றன
  1. எபிரேய மொழி
  2. கிரேக்க மொழி
  3. இலத்தீன் மொழி
  4. சமசுக்கிருத மொழி
  5. தமிழ் மொழி
  6. சீன மொழி
இவற்றுள் எபிரேய,கிரேக்க,இலத்தீன் மற்றும் சமசுக்கிருதம் என்பன பேச்சு வழக்கற்றுபோயுள்ளன;எனவே இவ்வாறான அழிவு நிலை நம் தமிழ் மொழிக்கு வருவதற்கு நாமே உரம் வீசலாமா?
சீனம் மற்றும் யப்பான் மொழிகளில் (ர்) என்ற எழுத்து பயன்பாட்டில் இல்லை.எனவே அவர்கள் பெயர் சொற்களில் வரும் 'ர்' ஐ தவிர்த்துவிட்டுதான் சொற்கள் அமைத்து அதன்படியே எழுதுகிறார்கள். சீனர்களோ, யப்பானியர்களோ அது தங்களின் மொழியின் பெரும் குறை என்றெல்லாம் சொல்வதில்லை. மேலும் அவர்களின் மொழியில் புதிய எழுத்துக்களை சேர்க்காததால் அவர்களுடைய மொழியில் பெயர் சொற்களின் சிதைவு உச்சரிப்பு நீங்கலாக வினைச் சொற்களில் பிறமொழி கலப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை.எடுத்துக்காட்டாக சிங்கப்பூர் என்பதை சீனர்கள் சிஞ்சப்பூ (ர்), ஆவுத்திரேலியா என்பதை ஆடேலியா என்றுதான் எழுதுவார்கள் அதற்கு அவர்கள் வெட்கப்படுவதும் இல்லை தங்கள் மொழியின் குறை என்றெல்லாம் வீணாக கற்பனை செய்து கொள்வதில்லை.இதுபோன்றே ஐரோப்பிய மொழிகளில் ஒன்றான பிரெஞ்சு மொழியில்( ஃ/க வரி )என்ற ஒலிவடிவம் ஏற்க்கபடுவதில்லை உதாரணாமாக கிட்லர் என்பதை இட்லர் எனவும் கொலன்ட் என்பதை ஒலன்ட் எனவும் மாறாக தலைநகர் பாரிசு என்பதை பாரி எனவும் பயன்படுத்துகிறார்கள்
ஆனால் எம்மவர்களிற்கு இவ்வாறான நன்னிறைவு மனநிலை காணப்படுவதில்லை உதாரணத்திற்கு ஆவுத்திரேலியா,ஒல்லாந்து,பிரான்சு என்று வடசொற்களை தவிர்த்து பயன் படுத்துகின்றோமா?சிந்தித்து பாருங்கள்